புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

அரசு பள்ளிக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்

அரசுப்பள்ளிகள் வரலாற்றில் முதல்முறையாக...

🌺🌺புரட்சிப் பயணத்தில் புது யுகம்  புதுமைகள் படைப்பதில் தனி யுகம்  புதுமைகள் நோக்கிய பயணம் தொடரும்
 மாற்றத்தை நோக்கி ஒரு யுகம் மலரும்...

🌲🌲கனவுகளை விதைக்கின்ற கற்பக விருட்சமே !
நின்ற இடத்திலேயே நின்று நித்தம் ஏணியாய் பலரை உயர்வுக்கு ஏற்றிவிடும் அதிசயப்பிறவி தான்  !

🌹🌹சரித்திர பயணத்தைத் தொடர்கின்ற நமது ஊ.ஒ.தொ.பள்ளி, புனவாசிப்பட்டி புதுமை பள்ளிக்கு இன்று (27/10/2018) பிறந்தநாள் விழா கொண்டாட்டம் மிகவும் சிறப்பாக கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது ...

 🌳🌳பள்ளி உதயமான தினம் - 27/10/1961
இன்று நம் பள்ளிக்கு 58 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா...

🙏🙏இவ்விழாவினை பள்ளி தலைமை ஆசிரியை திருமதி. விஜயகுமாரி அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார்...

💐💐பள்ளியின் உதவி ஆசிரியை திருமதி. மோகனாம்பாள் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்..

🌴🌴இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம் , கண்ணம்பாடி ஊ.ஒ.ந.நிலைப் பள்ளி தலைமையாசிரியை திருமதி.தீபா அன்பழகன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பு செய்தார்..

🐧🐧இவ்விழாவில் திருமதி. சிவச்செல்வி அவர்களும் , திருமதி.சந்தியா அவர்களும் பள்ளி பற்றிய கவிதை வழங்கினர்.

✈️✈️புதுமை விரும்பி.இரா .கோபிநாதன்
அவர்கள் இவ் விழாவின் நோக்கம் பற்றி பேசினார்.

🌟🌟முன்னாள் மாணவர் திரு. பாலசுப்ரமணி அவர்கள் தன் வாழ்க்கை பயணத்தை பற்றி பேசினார்... மிகவும் அருமை

🥇🥈🥉கவிதை போட்டியில் வெற்றி பெற்ற முன்னாள் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது...

🌲🌳🌴பள்ளி ஆசிரியர்கள் , முன்னாள் மாணவர்கள் ,பெற்றோர்கள் இன்னாள் மாணவர்கள் அனைவரும் இணைந்து பள்ளி வளாகத்தில் 7 புதிய அழகுச் செடிகள் வைத்தனர்... மிகவும் சிறப்பு

🌻🌻வருகைபுரிந்த அனைவருக்கும் கேக் மற்றும் இனிப்புகள் ( கேசரி) வழங்கப்பட்டன...

🙏🙏விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் பள்ளி உதவி ஆசிரியர் திரு. மணிமாறன் அவர்கள் நன்றி கூறினார்.

🥇🥇புதுமை பள்ளியே உன்னில் எத்தனை எத்தனை புதுமைகள்

🥈🥈வெற்றிக்கான விதைகளை விதைக்கும் விசித்திரமானவள்

 🥉🥉வளர்ச்சிக்கான வழிகளை கற்றுக்கொடுக்கும்
மூச்சுக்காற்று நீ...

நன்றி

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏










No comments:

Powered by Blogger.