புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

மாணவ விவசாய போட்டி

 மாணவ விவசாய போட்டி 




இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு , பாரம்பரிய காய்கறிகளை மீட்டெடுத்தல் சார்ந்து 







இன்று 23-07-2026 நமது பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் நாட்டு காய்கறி விதைகள் வழங்கப்பட்டது.


ஒன்றாம் வகுப்பு பீர்கை விதைகள் 





இரண்டாம் வகுப்பு பீர்க்கை விதைகள்








மூன்றாம் வகுப்பு பீர்க்கை விதைகள்









நான்காம் வகுப்பு சுரை விதைகள்









ஐந்தாம் வகுப்பு பரங்கி விதைகள்











ஒவ்வொரு வகுப்பிற்கும் தனித்தனியே சில எண்ணிக்கையில் விதைகள் வழங்கப்பட்டுள்ளன.


மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விதைகளை பெற்றோர்களின் உதவியுடன் அவர்கள் வீடுகளில் விதைகளை விதைத்து நன்முறையில் வளர்த்து சிறப்பாக அறுவடை செய்து வரும் மாணவர்களுக்கு வகுப்பு வாரியாக முதல் மூன்று அறுவடை செய்யும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.


விதிமுறைகள் 


1. 26-07-2026 ஞாயிற்றுக்கிழமைக்குள் விதைகளை பெற்றோர்களின் உதவியுடன் மாணவர்களே விதைக்க வேண்டும்.



2. விதை விதைக்கும் போது ஒரு புகைப்படம் வளர்ந்து வரும் போது ஒரு புகைப்படம், பூக்கும் போது & அறுவடை செய்யும் போது கட்டாயம் புகைப்படங்கள் எடுக்கப்பட வேண்டும்.


 3.முதல் அறுவடை செய்து (காய் நன்றாக விளைந்த பிறகு) பள்ளிக்கு எடுத்து வருபவர்களுக்கு வகுப்பிற்கு மூன்று பரிசுகள் வழங்கப்படும்.




பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிறந்த முறையில் வழி காட்டி வெற்றி பெற உதவிட வேண்டுகிறோம்.





கடந்த ஆண்டு விதை திருவிழா போட்டி கலந்து கொண்ட மாணவர்கள் 

Click here




முதல் அறுவடை செய்த மாணவர்கள் விபரம் 

இங்கே சொடுக்கவும்



வெற்றியாளர்களுக்கு  பரிசளிப்பு பாராட்டுச் சான்றிதழ் 

இங்கே சொடுக்கவும்









No comments:

Powered by Blogger.