புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வைத்த மரக்கன்று

 கரூர் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் ஐயா வைத்த மரக்கன்று...


தன் பொற்கரங்களால் நடவு செய்து 

கன்றை சுற்றி பாத்தி அமைத்து

நீர் ஊற்றி 

புகைப்படங்கள் எடுப்பதற்காக மட்டும் நடுவதல்ல மரக்கன்றுகள் ! 

பூமி பந்தை காப்பதற்காக மரம் வளர்ப்போம்!

 முதன்மை கல்வி அலுவலர்...

நமது பள்ளி வளாகத்தை இன்று முதல் அலங்கரிக்க போகிறது முதன்மை கல்வி அலுவலர் ஐயா வைத்த புங்கன் மரக்கன்று !




மரம்

மண்ணிற்கு மருதாணி

இயற்கையின் சீதனம்

அழகின் ஆசனம்


மரம்

உண்ண உணவு தரும் !

உடுக்க உடை தரும் !

உறங்க வீடு தரும் !



மரம் ஒரு
பச்சையக் கடவுள்…
மாசுகளிலிருந்து
மனிதரை காப்பதால் .
மரம் ஒரு
நிச்சயக் கடவுள் …
காணிக்கையே இன்றி
காக்கின்ற அருளால் .



மரம் …
கடும் நச்சு காற்றை
வடிக்கட்டும் தாவரம்.
மனிதா …
மரம் வளர்த்து
நாளைய தலைமுறை
வாழ … “தா”வரம் .


மண்ணுக்கும்
மரம்தான் உரம் !
மழைக்கும்
மரம்தான் வரம் !!

மனிதா …
கோடாரியை தூர எறி!
மரம் காக்கும் … புது
கொள்கைத் தரி !!



மரம் தான் ! மரம் தான்!
மண்ணின் 
வாரம்தான்! வாரம்தான்!
இதை உணர்ந்தால் 
நலம் தான்! நலம் தான்!



ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ,
புனவாசிப்பட்டி ,
கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், 
கரூர் மாவட்டம்.




No comments:

Powered by Blogger.