புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

சார் றெக்க முளைத்து விட்டது

 சார் றெக்கை முளைத்துவிட்டது சார்...

18-09-2023

🦋🦋அன்று பள்ளிக்கு சென்றபோது மாணவர்கள் அனைவரும் உற்சாகத்தோடும் , மிகுந்த மகிழ்ச்சியோடும் ஒருமித்த குரலில்

றெக்கை முளைத்த விட்டது சார் ...



🦋🦋அவர்களின் உற்சாகத்திற்கு

காரணம் அவர்கள் வளர்த்து வந்த புழு கூட்டுப்புழுவாகி பின் முழு றெக்கை முளைத்த வண்ணத்துப்பூச்சியாக வளர்ந்து விட்டதாம் அதுதான் அவர்களுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி...



🦋🦋ஆம் அவர்களுக்கு பறக்க சிறகு முளைத்து விட்டது போல ஓர் உற்சாகம்...


🦋🦋ஏனெனில்  இரண்டு மூன்று வார காலமாக ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கிடைத்த ஆராய்ச்சியின் பரிசு அல்லவா !



🦋🦋உண்மையில் அனைத்து மாணவர்களும் கற்றுக்கொண்டு விட்டார்கள் பாடத்தை மட்டுமல்ல ஆராய்ச்சி அனுபவத்தையும்...



👯👯பிறகு வண்ணத்துப்பூச்சியை சுதந்திரமாக பறக்க விட்டு ரசித்தனர்...



☃☃எங்கள் பள்ளி ஆராய்ச்சி மாணவர்களுக்கு தாங்கள் தரும் பரிசு என்னவோ ?



ஊ.ஒ.தொ.பள்ளி 

புனவாசிப்பட்டி...


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


No comments:

Powered by Blogger.