புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

எல்லை கடந்து பிறந்தநாள் கொண்டாட்டம்

கடல் கடந்து அகவை தின கொண்டாட்டம்


மலேசிய வாழ் இந்தியர் - இயற்கை ஆர்வலர், திரு.இராஜலிங்கம் பேராசிரியர் அவர்கள்              இன்று 31-01-2023 தமது பிறந்த நாளினை நம் பள்ளி மாணவர்கள் 125 மாணவர்களுக்கு குறிப்பேடுகள் & எழுது பொருள்கள் வழங்கி மலேசியாவில் இருந்தபடி  கொண்டாடினார்.




மாணவர்கள் அனைவரும் மகிழ்வுடன் அண்ணாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.









பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் மகிழ்வுடன் எழுதுப் பொருட்கள் வழங்கினார்...







எழுதுப் பொருட்களை திரு.இராஜலிங்கம் அவர்களின் வழிகாட்டலில் பள்ளிக்கு திரு.முருகானந்தம் அவர்கள் வாங்கி மாணவர்கள் அனைவருக்கும் வழங்கி சென்றார்.








 



விண்மீன்கள் ஒளியனுப்பி விடிந்ததொரு பொன்னாளென !


 விசும்பின் வீழ்த் துளியென விடை காணா

நாள்கள் வாழ்தின்பம் காண்க
வென வான்மழையும் வாழ்த்துரைக்க !

 கிண்கிணியெனக் கைபேசியும் பன்மொழியில் பாடம் ஒப்பிக்க 

குன்றா உலகில் நன்றாய் வென்றாய்!

 எனும் நற்பெயரொடு விஞ்சு புகழ் கண்டு

 மிஞ்சு வளம் கொண்டு

 வாழ்கவென வாழ்த்துகிறோம் வாழ்க பல்லாண்டு ... பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு இன்றுபோல் என்றும் உவந்து !...

மலேசிய மைந்தருக்கு பள்ளி மாணவர்கள் , ஆசிரியர்கள் & பெற்றோர்கள் சார்பில் மனமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
 இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ...





ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புனவாசிப்பட்டி கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்.

No comments:

Powered by Blogger.