புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

முதல்வருக்கு கடிதம்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், புனவாசிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 140 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
 இப்பள்ளியில் மூன்று புறம் சுற்று சுவர் இருக்கிறது.ஒரு பகுதியில் மட்டும் சுற்றுச்சுவர் இன்றி காணப்படுகிறது ஒருபுறம் சுற்றுச் சுவர் கட்ட வேண்டி பலமுறை ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் பலமுறை மனு அளித்தோம்.
 கடந்த ஆண்டு 27-10- 2020 அன்று ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் சுற்றுச் சுவர் கட்ட அஸ்திவாரம் தோண்டப்பட்டது.
 ஆனால், இதுநாள் வரையில் (ஒரு வருடகாலமாக) மேற்படி எந்த ஒரு பணியையும் மேற்கொள்ளாமல் கிடப்பில் உள்ளது.
  தற்போது பள்ளி திறக்கப்பட உள்ள நிலையில் அந்த அஸ்திவாரக்குழி மாணவர்களுக்கு பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.
 எனவே, சுற்றுச்சுவர் கட்டும் பணியை விரைந்து முடிக்க ஆவண செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

Powered by Blogger.