தமிழ்நாடு அறிவியல் இயக்கம் துளிர் திறனறிதல் தேர்வு 2025
சான்றிதழ் வழங்கும் விழா
புனவாசிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் துளிர் திறனறிதல் தேர்வு எழுதிய 22 மாணவர்களுக்கு இன்று 04-03-2025 சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் துளிர் திறனறிதல் தேர்வு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. ஶ்ரீதரன் அவர்கள் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கினார்.
பரிசளிப்பு விழாவை பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி.இரா.விஜயகுமாரி தலைமை ஏற்று நடத்தினார்.
பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரு.கார்த்திகேயன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
திறனறிதல் தேர்வை சிறப்பாக எழுதி சான்றிதழ் பெற்ற மாணவர்களைபள்ளி ஆசிரியர்கள் திரு.இரா.கோபிநாதன் மற்றும் திரு.கா.மணிமாறன் ஆகியோர் வாழ்த்தி பாராட்டினர்.
அனைத்து மாணவர்களும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்...
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் ,கரூர் மாவட்டம்.
No comments:
Post a Comment