புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

பெற்றோர் ஆசிரியர் கூட்டம்

இன்று 06-02-2020 பெற்றோர் ஆசிரியர் கூட்டம்


பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் திரு . இராஜலிங்கம் ஐயா அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார்.

பள்ளித் தலைமையாசிரியர் திருமதி.விஜயகுமாரி அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.

ஐந்தாம் வகுப்பு மாணவிகள் வரவேற்பு பாடல் பாடினர்

பள்ளி மேலாண்மை குழு தலைவி திருமதி. இராஜலட்சுமி ராஜன் அவர்கள் முன்னிலை வகித்தார்.

பள்ளியின் தீர்மானங்களை திருமதி மோகனாம்பாள் அவர்கள் எடுத்துரைத்தார்.

ஒரு முக்கியஸ்தர் திரு. வேலாயுதம் அவர்கள் பள்ளியின் முன்னேற்றம் குறித்து பேசினார்.

பள்ளி ஆசிரியர் திரு. இரா. கோபிநாதன்  அவர்கள்  பள்ளியின் வளர்ச்சி குறித்து பெற்றோர்களுடன் கலந்துரையாடினார்...

போட்டிகளில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பள்ளி ஆசிரியை திருமதி சந்தியா அவர்கள் கூட்டத்திற்கு நன்றி தெரிவித்தார்.














இன்று 06-02-2020






No comments:

Powered by Blogger.